Wednesday, October 5, 2016

கன்னஞ் செவந்த காந்தமே

உள்ள இழுத்த
உயிர் காத்தா
ஊ நெனப்பு
ஊருதே,
கள்ளச் சிரிப்பில்
ஏ பொழப்பு
புத்தம் புதுசா
மாறுதே.
 
கிட்ட நெருங்கி
ஒன்ன பாத்தா
சின்னப் புள்ளதான்
பூவே நீ,
எட்ட இருந்து
சுண்டி இழுக்கும்
கன்னஞ் செவந்த
காந்தமே.
 
கால் நகத்த கை நகத்த
வெட்டிப் போட்ட துண்டு,
பறக்குதடி மெதக்குதடி
ஆகாயத்தில் நின்னு,
நச்சத்திரம் நச்சத்திரம்னு
பேரு வச்சேன்,
வச்சதுல வானத்துல
தேரு வச்சேன்.
 
தூங்கையில ஊ உசுரு
உன்னுதில்ல, நா
ஏங்கையில ஏ உசுரு
கண்ணுக்குள்ள,
ஊ கண்ணுக்குள்ள.
 
நான் கண்டுபுடிச்ச காதலே
உனக்கென்ன வேணும்,
நீ எடுத்த முடிவுக்குத்தான்
வந்தாச்சி நானும்,
கலர் கலரா பட்டாம்பூச்சி
பறக்கல இன்னும்,
காதலுக்கு கடவுள் வாழ்த்து
படிச்சிட வேணும்.
 
பொருத்தமெல்லாம் பத்துக்குமேல்
வேணாம் போடி,
கருத்த நிலா நீ எனக்கு
போதும் வாடி.
 
செவப்புலதான் ஓடுதடி
ரத்தம் எனக்கு, அந்த
ரத்தத்துல பொட்டெடுத்து
வெப்பேன் ஒனக்கு...
 
மஞ்சளுல மால ஒண்ணு தாரேன் பொண்ணே, ஓ
நெஞ்சுலயே வீடுகட்டி
வாழப்போறன்...
 
-பித்தன்.

வானம் வசப்படும்

ஓரங்குல இராஜ்ஜியத்தில்
ஒற்றையாய் வேட்டையாடும்
சிலந்திக்கும் உண்டு
வெற்றி தோல்வி...
 பாரெங்கும் அலைகின்ற
காற்றினை சுவாசிக்கும் மனிதா
உனக்கென்னடா...

வெற்றி உன்னிடத்தில்
உடனே பணியாது.
துளிர்க்கும் நம்பிக்கை
அதற்கு ஈடே கிடையாது...

வேறெங்கும் வேண்டாம்
மண்ணிலே விழு
விதையாய்,
யாரென்று கேட்டால்
நானென்று சொல்
மிகையாய்...

புவியிழு சக்தியை
எதிர்த்து எழு
மரமாய்,
கவியொடு புவனையை
மதித்துவிடு
அளவாய்...

வில்லென வளை
ஈசலைப்போல் உழை.
அம்பெனப் பின்னெழுந்து
முன்னேறு...

வான இராஜாங்கம்
இனி நமது வீட்டுவசதி வாரியம்.
ஆம்,
வானமும் நமக்கு வசப்படும்.

-பித்தன்.

நானும் நீயும்

உன் இமையில் முடங்குதடி
என் இராஜ வாலிபமே...
என் கனவில் வந்ததடி
நம் காதல் காவியமே...

உன்னைக் கண்டதிலே
எனது மௌனமடி
கவிதை பேசுதடி
கலகம் செய்யுதடி...

காணும் நிறத்தில்
கண்ட இடத்தில்
நெருங்கி வா...
தேகம் சூழ்ந்து
மோகம் ஈனும்
கண்ணில் வா...

தேனைச் சுமந்த
பாவை உந்தன்
அதரத்தில்,
பட்டு எந்தன்
கட்டை விரலும் இனிக்குதே...

காதல் தொடங்கி
காமம் முடியும்
நேரத்தில்,
நானும் நீயும்
நகமும் சதைதான்
தேகத்தில்...

கண்களே,
அவளைத் தேடித்தேடி
கனவை மூடிமூடி
இரவில் இராகம் பாடி
மலர்ந்திடேன்...

உன் இமையில் முடங்குதடி
என் இராஜ வாலிபமே...
என் கனவில் வந்ததடி
நம் காதல் காவியமே...

-பித்தன்.

Friday, September 30, 2016

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.