Wednesday, October 5, 2016

கன்னஞ் செவந்த காந்தமே

உள்ள இழுத்த
உயிர் காத்தா
ஊ நெனப்பு
ஊருதே,
கள்ளச் சிரிப்பில்
ஏ பொழப்பு
புத்தம் புதுசா
மாறுதே.
 
கிட்ட நெருங்கி
ஒன்ன பாத்தா
சின்னப் புள்ளதான்
பூவே நீ,
எட்ட இருந்து
சுண்டி இழுக்கும்
கன்னஞ் செவந்த
காந்தமே.
 
கால் நகத்த கை நகத்த
வெட்டிப் போட்ட துண்டு,
பறக்குதடி மெதக்குதடி
ஆகாயத்தில் நின்னு,
நச்சத்திரம் நச்சத்திரம்னு
பேரு வச்சேன்,
வச்சதுல வானத்துல
தேரு வச்சேன்.
 
தூங்கையில ஊ உசுரு
உன்னுதில்ல, நா
ஏங்கையில ஏ உசுரு
கண்ணுக்குள்ள,
ஊ கண்ணுக்குள்ள.
 
நான் கண்டுபுடிச்ச காதலே
உனக்கென்ன வேணும்,
நீ எடுத்த முடிவுக்குத்தான்
வந்தாச்சி நானும்,
கலர் கலரா பட்டாம்பூச்சி
பறக்கல இன்னும்,
காதலுக்கு கடவுள் வாழ்த்து
படிச்சிட வேணும்.
 
பொருத்தமெல்லாம் பத்துக்குமேல்
வேணாம் போடி,
கருத்த நிலா நீ எனக்கு
போதும் வாடி.
 
செவப்புலதான் ஓடுதடி
ரத்தம் எனக்கு, அந்த
ரத்தத்துல பொட்டெடுத்து
வெப்பேன் ஒனக்கு...
 
மஞ்சளுல மால ஒண்ணு தாரேன் பொண்ணே, ஓ
நெஞ்சுலயே வீடுகட்டி
வாழப்போறன்...
 
-பித்தன்.

No comments:

Post a Comment