Wednesday, October 5, 2016

வானம் வசப்படும்

ஓரங்குல இராஜ்ஜியத்தில்
ஒற்றையாய் வேட்டையாடும்
சிலந்திக்கும் உண்டு
வெற்றி தோல்வி...
 பாரெங்கும் அலைகின்ற
காற்றினை சுவாசிக்கும் மனிதா
உனக்கென்னடா...

வெற்றி உன்னிடத்தில்
உடனே பணியாது.
துளிர்க்கும் நம்பிக்கை
அதற்கு ஈடே கிடையாது...

வேறெங்கும் வேண்டாம்
மண்ணிலே விழு
விதையாய்,
யாரென்று கேட்டால்
நானென்று சொல்
மிகையாய்...

புவியிழு சக்தியை
எதிர்த்து எழு
மரமாய்,
கவியொடு புவனையை
மதித்துவிடு
அளவாய்...

வில்லென வளை
ஈசலைப்போல் உழை.
அம்பெனப் பின்னெழுந்து
முன்னேறு...

வான இராஜாங்கம்
இனி நமது வீட்டுவசதி வாரியம்.
ஆம்,
வானமும் நமக்கு வசப்படும்.

-பித்தன்.

No comments:

Post a Comment