Sunday, December 17, 2017

வாலிபக் கவி வாலி

தமிழைப் புடம்போட்டு
தங்கத் தமிழ் தரும்
பொன்னாசான்
என்னாசான்,

முருகுத் திருத் தமிழ்
பருகத் தந்தவன்
பொன்னாசான்
என்னாசான்,

சன்யாசி வேஷம்
தன்யாசி ராகம்,
உன்னாசி வேண்டி
என் நாசி மூச்சுரைக்கும்.

தமிழ்நாட்டின் தாகூரே
தென் தமிழின் தேன்கூடே
சங்கத் தமிழ்
வள்ளுவன் கூறும்
வாலறிவனே...

ஐயன் வாலியின்
எண்பத்தேழாவது பிறந்தநாள் இன்று.❤😘😇😍

-பித்தன்.

No comments:

Post a Comment